Monday, June 28, 2010

கணினியின் செயல்படுவேகத்திறனை குறைக்கவிடாமல் பராமரிக்க உதவும் இலவச மென்பொருள்கள் – பாகம் 1

கணினியை தினமும் பயன்படுத்தினால் அதன் செயல்பாடு திறன் நாள் அடைவில் குறைந்து விடுகிறது, என்பது ஒரு பரவலான குற்றச்சாட்டு. அதற்கு முக்கியமான காரணம் operating system-தினால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகள் மற்றும் registry என்கிற மென்பொருள் பதிவேடும் தான். Operating System திறன்பட இயங்க இந்த தற்காலிக கோப்புகள் மிக முக்கியமானவை. ஆனால் அதன் வேலை முடிந்த உடன் தற்காலிக கோப்புகள் தேவையற்ற ஒன்று தான். தொடர் உபயோகத்தினால் தற்காலிக கோப்புகள் மலை போல சேர்ந்து கொண்டே வரும். அதனால் hard disk-யில் இடம் குறைத்து கொண்டே வருவதனால் operating system மெதுவாக இயங்கும். Windows Operating System தானாக எல்லா தற்காலிக கோப்புகளையும் அழிக்காது.

 

இவ்வாறு சேர்த்துக்கொண்டே வரும் கோப்புகளை நாம் தான் அடிக்கடி அழிக்கவேண்டும். மேலும் மென்பொருள் பதிவேடையும் பராமரிக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு பராமரிப்பு பணிகளையும் எளிமையாக்க CCleaner என்கிற மென்பொருளை பயன்படுத்தலாம். CCleaner ஒரு இலவச மென்பொருள். இதனை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

1. CCleaner-ரை டவுன்லோட் செய்து நிறுவியபின் எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்க்கலாம். CCleaner-ரை ஓபன் செய்தால் இவ்வாறு ஒரு விண்டோ கிடைக்கும்:

2. இந்த விண்டோவின் இடதுபுறம் உள்ள cleaner-என்பதை தேர்வு செய்து வலதுபுறம் உள்ள Analyze-என்கிற பட்டனை கிளிக் செய்தால் என்ன-என்ன கோப்புகள் அழிகவேண்டியவை மற்றும் disk-ல் அதன் ஆக்கிரமிப்பு அளவினை குறிப்பிடும். மொத்தம் எவ்வளவு இடம் காலியாகும் என்கிற செய்தி கூட வரும். பிறகு run cleaner-என்கிற பட்டனை கிளிக் செய்தால் அனைத்து தேவையில்லா கோப்புகளையும் தானாகவே அழித்துவிடும். அழித்தபின் எவ்வளவு இடம் காலி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும்.

3. அடுத்து வலது பக்கம் உள்ள registry-என்கிற பட்டனை கிளிக் செய்யவும். இந்த விண்டோவில் இடது பக்கம scan for issues-பட்டனை கிளிக் செய்தால் கணினியில் உள்ள அனைத்து மென்பொருள் பதிவேடுகளையும் ஆராயும். அதில் ஏதேனும் தவறு இருந்தால் காட்டி விடும். பின்பு fix selected issues...-என்கிற பட்டனை கிளிக் செய்து பதிவேட்டை சரி செய்யல்லாம். சரி செய்வதற்கு முன் அப்போதைய பதிவேட்டை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக save-செய்ய சொல்லும். நீங்கள் அதனை save-செய்து விட்டு பதிவேட்டை சரி செய்யல்லாம். பின்னர் பராமரிப்பு முடித்தபின்பு என்ன பனி செய்யப்பட்டது என்கிற செய்தி வரும்.
4. அடுத்தது வலது பக்கம் உள்ள tools-யை கிளிக் செய்யவும். பின்பு start up..-என்கிற தேர்வை கிளிக் செய்தால் கணினி தொடங்கும்போது தேவை படும் மென்பொருள்களின் பட்டியல் காண்பிக்கப்படும். அதில் இருந்து நமக்கு தேவை படாத மென்பொருள்களை நீக்கி விட்டால் கணினி மிக வேகமாக தொடங்கும். ஏனென்றால் கணினி தொடங்க தேவை படும் மென்பொருள்களின் எண்ணிக்கை மிக குறைவு தான். தெயவைல்லாத மென்பொருள்கள் இந்த தொடக்க பட்டியியலில் தானாகவே இணைத்து கணினியின் தொடக்க வேகத்தை குறைத்து விடுகின்றன.

மேற்கண்ட அனைத்து பராமரிப்பு பணிகளை வாரம் ஒரு முறை கடைபிடித்தால் operating system-மிக சீராக இயங்கும். அடுத்த பதிவில் மேலும் ஒரு முக்கியமான பராமரிப்பு மென்பொருளோடு சந்திக்கிறேன்!

5 comments:

http://rkguru.blogspot.com/ said...

இந்த மென்பொருள் அருமையான மென்பொருள்....

என்றும் நட்புடன்:
Rk. குரு

நளினி சங்கர் said...

மிகவும் உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள் கம்பியூட்டர் மெக்கானிக்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

Super!

Hindu Marriages In India said...

மிகவும் அருமை

Unknown said...

மிகவம் பயனுள்ள தகவல்

Post a Comment